நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் தலைமையில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர்கள் மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை, நகரங்கள், வடிகால் அமைப்புகள், வர்த்தக வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல்.ஜூன் 18 (வியாழன்), பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவன வளாகங்களையும் சுத்தப்படுத்துதல்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தப்படுத்துதல். ஜூன் 20 சனிக்கிழமை தனிப்பட்ட வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தப்படுத்துதல் என கட்டம் கட்டமாக டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன
