ஹொரனை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் இயக்குனரை ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரானா நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த முதியோர் இல்லம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த முதியோர் இல்லம், 2024 முதல் இயங்கி வந்ததுடன், துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 70 பேர் பராமரிப்பில் இருந்துள்ளனர். அங்கு பராமரிக்கப்பட்டவர்களில் மனநலப் பாதிப்புக்குள்ளான 62 பேர் மற்றும் எட்டு முதியவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கப்படுகின்றது.

முதியோருக்கான உறைவிடப் பராமரிப்பு வசதிகளை நிர்வகிக்கும் இலங்கையின் சட்டங்களின் கீழ் தேவைப்படும் பதிவு இல்லாமல் அந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

குடியிருப்பாளர்களின் உறவினர்கள், குடும்பங்கள் அனுமதி கட்டணமாக ரூ. 75,000 உம், தங்குமிடம் மற்றும் பராமரிப்பிற்காக ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மாதந்தோறும் சுமார் ரூ. 35,000 உம் கட்டணம் செலுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில பராமரிப்பாளர்கள் உட்பட ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது என்று செயலகம் குறிப்பிட்டது.

மேலும் இந்த தீ விபத்தில் 51 பேர் மீட்கப்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்
