நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, 624 வீடுகளை கொண்ட 12 மாடிகளைக் கொண்ட கொலன்னாவை வீடமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) வழங்கிய நிதி உதவியுடன் ரூ. 5,784 மில்லியன் செலவில் இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர அண்மையில் அங்கு சென்று நிறைவடைந்த வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
