அமெரிக்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளம் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சாட் ஃபலீல் (Saad Falil) 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், இந்தப் பிரிவில் தகுதி பெற்ற ஒரே தெற்காசிய வீரராகவும் இடம்பிடித்துள்ளார்.
அதேவேளை, அதீப் ரிபாய் (Athib Rifai) 400 மீற்றர் தடைதாண்டும் ஓட்டப் போட்டியில் இலங்கைக்காக களமிறங்கவுள்ளார்.
இரு வீரர்களும் போட்டியை முன்னிட்டு தற்போது இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
