பொகவந்தலாவையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நோர்வூட் நியொலிகம பகுதியில் உள்ள ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார், சறுக்கிச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக் கம்பத்தில் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கியது ஒரு வாடகைக் கார் என்றும் அந்தக் காரில் 2 பேர் பயணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
