தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இம்மாத இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மே 21ஆம் திகதி நாடு திரும்பிய பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10ஆம் திகதி விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மே 13ஆம் திகதி நடைபெற்ற சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விஜய் தலைமையிலான அரசு 144 வாக்குகள் பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து விஜய் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், நாட்டின் பிரதமரை அவர் உத்தியோகபூர்வமாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
