Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசுக்கு 44 கோடி ரூபா இலாபம்!

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் பரீட்சார்த்திகளிடமிருந்து சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபமாக ஈட்டியுள்ளதான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளிடம் இருந்து பரீட்சைக் கட்டணமாக சுமார் 2,700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் உட்பட 1 இலட்சத்து 50,000 க்கும் மேற்பட்டோர் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதன் மூலம் பரீட்சைக் கட்டணமாக மட்டும் மொத்தம் 44 கோடி 21 இலட்சத்துக்கும் அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களில் 23,000 பேர் என்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரே ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த காலங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.

ஆனால் இம்முறை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு வினாத்தாளும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேறொரு வினாத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் தயாரிப்பில் அரசாங்கம் பாரிய சமநிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

மேலும், பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் உள்ள சில வினாக்கள் தீர்ப்பதற்கு மிகவும் கடினமானதாக அமைந்திருந்தன. ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மிகவும் இலகுவாக விடையளிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைவிடப்பட்டது. எனவே அவர்களுக்கு ஏதேனும் ஒரு சலுகையை வழங்குவதற்காக ஆசிரியர் பரீட்சை வினாத்தாள்களில் இவ்வாறான நெகிழ்வான போக்கு கடைப்பிடிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

அனைத்து பரீட்சார்த்திகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும் ஒரே பரீட்சைக்கு 2 வெவ்வேறு வினாத்தாள்கள்களை வழங்கியமை வேலையற்ற பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்று!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பால் மாவின் விலை அதிகரிப்பு

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube