மதுபான சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் தொடர்பில் , சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான சாலையில் நடனமாடும் போது இரு தரப்பினரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரையும் மதுபான சாலையின் உரிமையாளர் வெளியேற்றியுள்ளார்
இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற பெண் மற்றும் சுமன் , சக்திவேல் ஆகிய இருவருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இறுதியில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்
இந்நிலையில் யான்சி தனது தோழிகளுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டபோது அவரை பின்தொடர்ந்த கும்பல் மோட்டார் சைக்கிளின் மீது காரை வேகமாக மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள். இதில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். உடன் வந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மதுபான சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
