ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்ட கணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மனைவி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகள் நிறைவடையும் வரை சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
