நானுஓயா ஹட்டன் (A7) பிரதான வீதி ஆரம்பிக்கும் சந்தியில் இன்று (15) அதிகாலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வலப்பனை பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும் சிறு சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
