அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கைகளில் இருப்பவர்கள் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அதற்கமைய, ஜூன் 20ஆம் திகதி முதல் எவ்வித விதிவிலக்குமின்றி இந்த ஆசனப்பட்டி சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இச்சட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
