யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், குறித்த லொறியானது தரித்து நின்ற பட்டா மீது கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றது.
