கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தியதலாவை கல்கந்த பகுதியில் இன்று (15) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
திடீரென பேருந்தின் பிரேக் கட்டமைப்பு செயழிலந்ததை அடுத்து பேருந்து விபத்திற்கு உள்ளாகியாள்ளது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதியின் சாமர்த்தியம் காரணமாக நடக்கவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. பிரேக் செயழிலந்ததை அறிந்துக்கொண்ட சாரதி பேருந்தை குறுக்கு பாதையில் செலுத்த முயன்றுள்ளார். இதன் போது பாதை அருகிலிருந்த புத்தர் சிலை வைக்கப்பட்ட மண்டபத்துடன் பேருந்து மோதியுள்ளது.
இதனால் குறித்த மண்டபத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பேருந்திற்கு சேதங்களோ அதில் பயணித்தவர்களுக்கு காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தியதலாவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
